சங்கீதம் 111
1 அல்லேலூயா,  
செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.   
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,  
அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.   
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,  
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.   
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,  
யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.   
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;  
தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.   
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,  
தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.   
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;  
அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.   
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,  
அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.   
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,  
தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;  
அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.   
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;  
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு;  
அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.