சங்கீதம் 134
ஆரோகண பாடல். 
 
1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய  
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,  
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.   
2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,  
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.   
3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா  
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.