சங்கீதம் 149
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;  
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.   
2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,  
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.   
3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,  
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.   
4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;  
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.   
5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,  
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.   
6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,   
7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,  
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,  
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,   
8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,  
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.   
9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.  
அல்லேலூயா.