சங்கீதம் 15
தாவீதின் பாடல். 
 
1 யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?  
யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?   
2 உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,  
மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.   
3 அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,  
தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,  
தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.   
4 ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.  
5 தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.