சங்கீதம் 47
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல். 
 
1 எல்லா மக்களே, கைகொட்டி,  
தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.   
2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,  
பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.   
3 மக்களை நமக்கு கீழ்படுத்தி,  
தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.   
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)   
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.   
6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;  
நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.   
7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.   
8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;  
தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.   
9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;  
பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;  
அவர் மகா உன்னதமான தேவன்.