சங்கீதம் 62
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 
 
1 தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;  
அவரால் என் இரட்சிப்பு வரும்.   
2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,  
என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;  
நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.   
3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,  
நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,  
சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.   
4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே  
அவர்கள் ஆலோசனைசெய்து,  
பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,  
தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.  
(சேலா)   
5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;  
நான் நம்புகிறது அவராலே வரும்.   
6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,  
என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;  
நான் அசைக்கப்படுவதில்லை.   
7 என்னுடைய இரட்சிப்பும்,  
என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;  
பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.   
8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;  
அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;  
தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)   
9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;  
தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்  
மாயையிலும் லேசானவர்கள்.   
10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;  
செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.   
11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;  
வல்லமை தேவனுடையது என்பதே.   
12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!  
தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.