சங்கீதம் 87
கோராகின் மகன்களுடைய பாடல். 
 
1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.   
2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட  
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.   
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)   
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;  
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,  
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;   
5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;  
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.   
6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,  
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)   
7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று  
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.