3
தாவீதின் மகன்கள்
தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே:
 
யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்;
கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன்.
கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்;
ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன்.
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்;
தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன்.
 
இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான்.
 
 
தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான். எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்:
 
சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத், நோகா, நெப்பேக், யப்பியா, எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.
 
தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி.
யூதாவின் அரசர்கள்
10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;
அவனுடைய மகன் அபியா;
அவனுடைய மகன் ஆசா,
அவனுடைய மகன் யோசபாத்.
11 அவனுடைய மகன் யோராம்,
அவனுடைய மகன் அகசியா,
அவனுடைய மகன் யோவாஸ்,
12 அவனுடைய மகன் அமத்சியா,
அவனுடைய மகன் அசரியா,
அவனுடைய மகன் யோதாம்,
13 அவனுடைய மகன் ஆகாஸ்,
அவனுடைய மகன் எசேக்கியா,
அவனுடைய மகன் மனாசே,
14 அவனுடைய மகன் ஆமோன்,
அவனுடைய மகன் யோசியா.
15 யோசியாவின் மகன்கள்:
மூத்த மகன் யோகனான்,
இரண்டாவது மகன் யோயாக்கீம்,
மூன்றாவது மகன் சிதேக்கியா.
நான்காவது மகன் சல்லூம்.
16 யோயாக்கீமின் மகன்கள்:
அவன் மகன் எகொனியாவும்,
அவன் மகன் சிதேக்கியாவும்.
நாடுகடத்தப்பட்டபின் அரச வம்சாவழி
17 சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்:
அவனுடைய மகன் செயல்தியேல், 18 மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19 பெதாயாவின் மகன்கள்:
செருபாபேல், சிமேயி.
செருபாபேலின் மகன்கள்:
மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித். 20 இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
21 அனனியாவின் சந்ததிகள்:
பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர்.
22 செக்கனியாவின் சந்ததிகள்:
செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர்.
23 நெயெரியாவின் மகன்கள்:
எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர்.
24 எலியோனாயின் மகன்கள்:
ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர்.