6
லேவி
லேவியின் மகன்கள்:
கெர்சோன், கோகாத், மெராரி.
கோகாத்தின் மகன்கள்:
அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
அம்ராமின் பிள்ளைகள்
ஆரோன், மோசே, மிரியாம்.
ஆரோனின் மகன்கள்:
நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்.
எலெயாசார் பினெகாசின் தகப்பன்;
பினெகாஸ் அபிசுவாவின் தகப்பன்,
அபிசுவா புக்கியின் தகப்பன்,
புக்கி ஊசியின் தகப்பன்.
ஊசி செரகியாவின் தகப்பன்.
செரகியா மெராயோத்தின் தகப்பன்,
மெராயோத் அமரியாவின் தகப்பன்,
அமரியா அகிதூபின் தகப்பன்,
அகிதூப் சாதோக்கின் தகப்பன்,
சாதோக் அகிமாஸின் தகப்பன்,
அகிமாஸ் அசரியாவின் தகப்பன்,
அசரியா யோகனானின் தகப்பன்,
10 யோகனான் அசரியாவின் தகப்பன்.
எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்தவன் இவனே.
11 அசரியா அமரியாவின் தகப்பன்,
அமரியா அகிதூபின் தகப்பன்,
12 அகிதூப் சாதோக்கின் தகப்பன்,
சாதோக் சல்லூமின் தகப்பன்.
13 சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்;
இல்க்கியா அசரியாவின் தகப்பன்,
14 அசரியா செராயாவின் தகப்பன்,
செராயா யோசதாக்கின் தகப்பன்.
15 யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதாவையும், எருசலேமையும் நாடுகடத்தியபோது, யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டான்.
 
16 லேவியின் மகன்கள்:
கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.
17 கெர்சோமின் மகன்கள்:
லிப்னி, சீமேயி.
18 கோகாத்தின் மகன்கள்:
அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல்.
19 மெராரியின் மகன்கள்:
மகேலி, மூஷி.
 
இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.
20 கெர்சோமின் மகன்கள்:
கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்;
அவனுடைய மகன் சிம்மா, 21 அவனுடைய மகன் யோவா;
அவனுடைய மகன் இத்தோ; அவனுடைய மகன் சேரா;
அவனுடைய மகன் யாத்திராயி.
22 கோகாத்தின் சந்ததிகள்:
கோகாத்தின் மகன் அம்மினதாப்,
அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர், 23 அவனுடைய மகன் எல்க்கானா,
அவனுடைய மகன் எபியாசாப், அவனுடைய மகன் ஆசீர்,
24 அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் ஊரியேல்,
அவனுடைய மகன் உசியா, அவனுடைய மகன் சாவூல் என்பவர்கள்.
25 எல்க்கானாவின் சந்ததிகள்:
அமசாயி, அகிமோத்.
26 அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய்,
அவனுடைய மகன் நாகாத்,
27 அவனுடைய மகன் எலியாப்,
அவனுடைய மகன் எரோகாம், அவனுடைய மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சாமுயேல்.
28 சாமுயேலின் மகன்கள்:
முதற்பேறானவன் யோயேல்*,
இரண்டாம் மகன் அபியா.
29 மெராரியின் சந்ததிகள்:
மகேலி, இவனது மகன் லிப்னி,
இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;
30 இவனது மகன் சிமெயா, இவனது மகன் அகியா,
இவனது மகன் அசாயா.
ஆலய இசைக் கலைஞர்கள்
31 யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான். 32 இவர்களே சாலொமோன் எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டிமுடிக்கும்வரை, சபைக் கூடாரமான ஆசரிப்புக்கூடாரத்தின் முன்னிலையில் சங்கீத சேவையுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒழுங்குமுறையின்படி தங்கள் கடமைகளைச் செய்துவந்தனர்.
 
33 தங்கள் மகன்களுடன் அங்கு பணிசெய்த மனிதர்கள் இவர்களே:
 
கோகாத்தியரில்:
இசைக் கலைஞன் ஏமான்,
இவன் யோயேலின் மகன், இவன் சாமுயேலின் மகன்,
34 இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன்,
இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன்,
35 இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன்,
இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன்,
36 இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன்,
இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன்,
37 இவன் தாகாத்தின் மகன், இவன் ஆசீரின் மகன்,
இவன் எபியாசாப்பின் மகன், இவன் கோராகுவின் மகன்,
38 இவன் இத்சாரின் மகன், இவன் கோகாத்தின் மகன்,
இவன் லேவியின் மகன், இவன் இஸ்ரயேலின் மகன்.
39 ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்:
ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன்,
40 இவன் மிகாயேலின் மகன், இவன் பாசெயாவின் மகன்,
இவன் மல்கியாவின் மகன், 41 இவன் எத்னியின் மகன்,
இவன் சேராயின் மகன், இவன் அதாயாவின் மகன்,
42 இவன் ஏத்தானின் மகன், இவன் சிம்மாவின் மகன்,
இவன் சீமேயின் மகன், 43 இவன் யாகாத்தின் மகன்,
இவன் கெர்சோமின் மகன், இவன் லேவியின் மகன்.
44 மெராரியராகிய இவர்களது சகோதரர்கள் அவர்களுடைய இடதுபக்கத்தில் நிற்பார்கள்:
அவர்களில் ஏத்தான் கிஷியின் மகன், இவன் அப்தியின் மகன்,
இவன் மல்லூக்கின் மகன், 45 இவன் அசபியாவின் மகன்,
இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
46 இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன்,
இவன் சாமேரின் மகன், 47 இவன் மகேலியின் மகன்,
இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன்,
இவன் லேவியின் மகன்.
 
48 இவர்களோடிருந்த மற்ற லேவியர்கள் இறைவனது ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டார்கள். 49 ஆனால் இறைவனின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியே, ஆரோனும் அவனுடைய சந்ததிகளும் மட்டுமே மகா பரிசுத்த இடத்திலுள்ள தகன பலிபீடங்களில் இஸ்ரயேலின் பாவநிவிர்த்திக்காக பலியிட்டு, தூப மேடைகளில் தூபங்காட்டும் வேலையையும் செய்வதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
50 ஆரோனின் சந்ததிகள் இவர்களே:
அவன் மகன் எலெயாசார், அவன் மகன் பினெகாஸ்,
அவன் மகன் அபிசுவா, 51 அவன் மகன் புக்கி,
அவன் மகன் ஊசி, அவன் மகன் செரகியா,
52 அவன் மகன் மெராயோத், அவன் மகன் அமரியா,
அவன் மகன் அகிதூப், 53 அவன் மகன் சாதோக்,
அவன் மகன் அகிமாஸ்.
 
54 அவர்களுக்கென பிரதேசமாக நியமிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடங்களாவன: முதல் சீட்டு கோகாத் வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் சந்ததிகளுக்கு விழுந்தபடியால், அவர்களுக்கு அவ்விடங்கள் கொடுக்கப்பட்டன.
55 அதன்படி அவர்களுக்கு யூதாவிலுள்ள எப்ரோனும், அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன. 56 ஆனால் பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களும், கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன. 57 ஆரோனின் சந்ததிகளுக்கு எப்ரோன் என்ற அடைக்கலப் பட்டணங்களில் லிப்னா, யாத்தீர், எஸ்தெமோவா, 58 ஈலேன், தெபீர், 59 ஆஷான், யூத்சா, பெத்ஷிமேஷ் ஆகிய பட்டணங்களோடு அவற்றைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
60 பென்யமீன் கோத்திரத்திற்கு கிபியோன், கேபா, அலெமேத், ஆனதோத் ஆகிய பட்டணங்களும், அவற்றைச் சேர்ந்த மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
எல்லாமாக பதின்மூன்று பட்டணங்கள் கோகாத்திய வம்சங்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
 
61 மீதமிருந்த மற்ற கோகாத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தின் பத்துப் பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
62 கெர்சோமின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கேற்ப இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் இருக்கிற மனாசேயின் மற்ற பாதிக் கோத்திரங்களிலுமிருந்து பதின்மூன்று பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
63 மெராரியின் சந்ததிகளுக்கு அவர்களின் ஒவ்வொரு வம்சங்களுக்கும் ஏற்ப ரூபன், காத், செபுலோன் கோத்திரங்களிலுமிருந்து பன்னிரண்டு பட்டணங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.
 
64 இவ்வாறு இஸ்ரயேலர் இந்தப் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் லேவியர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
 
65 யூதா, சிமியோன், பென்யமீன் ஆகிய கோத்திரங்களிலிருந்தும் முன்குறிப்பிடப்பட்ட பட்டணங்களையும் கொடுத்தார்கள்.
 
66 சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
67 எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர், 68 யோக்மேயாம், பெத் ஓரோன், 69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகியவை அவற்றோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
70 எஞ்சியிருந்த கோகாத்தியரின் வம்சங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து, ஆனேரும், பீலியாமும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் இஸ்ரயேலரால் கொடுக்கப்பட்டன.
 
71 கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன:
மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
72 இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத், 73 ராமோத், ஆனேம் பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
74 ஆசேர் கோத்திரத்திலிருந்தும் மாஷால், அப்தோன், 75 ஊக்கோக், ரேகோப் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
76 நப்தலி கோத்திரத்திலிருந்தும் கலிலேயாவிலிருக்கிற கேதேசையும், அம்மோன், கீரியாத்தாயீம் பட்டணங்களையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
 
77 லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள்
செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
78 யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா, 79 கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
80 காத் கோத்திரத்திலிருந்து, கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், 81 எஸ்போன், யாசேர் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
* 6:28 6:28 சில எபிரெய வேதத்தின் கிரேக்க பதிவுகளில் யோயேல் என உள்ளது. வஷ்னீ என எபிரெய மொழி வேதத்தில் உள்ளது.