சங்கீதம் 100
நன்றிப்பாடல். 
 
1 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.   
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,  
ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.   
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;  
நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்;  
நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.   
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,  
அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.   
5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,  
அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.