சங்கீதம் 99
1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,  
மக்கள் தத்தளிப்பார்களாக;  
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,  
பூமி அசைவதாக.   
2 யெகோவா சீயோனில் பெரியவர்,  
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.   
3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;  
அது பரிசுத்தமுள்ளது.   
4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,  
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;  
நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.   
5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,  
அவர் பாதத்தைப் பணியுங்கள்;  
அவர் பரிசுத்தமுள்ளவர்.   
6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,  
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,  
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;  
அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.   
7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;  
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்  
அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.   
8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,  
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;  
நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,  
அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.   
9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,  
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;  
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.