சங்கீதம் 114
1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,   
2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,  
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.   
3 கடல் கண்டு விலகி ஓடினது;  
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.   
4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,  
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.   
5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;  
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;   
6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,  
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,  
உங்களுக்கு என்ன வந்தது?   
7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,  
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.   
8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,  
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.