சங்கீதம் 115
தாவீதின் பாடல். 
 
1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,  
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.   
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே  
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?   
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;  
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.   
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,  
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.   
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;  
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.   
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;  
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.   
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;  
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;  
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.   
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,  
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.   
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;  
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.   
10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;  
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.   
11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,  
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.   
12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,  
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,  
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.   
13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,  
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.   
14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.   
15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.   
16 வானங்கள் யெகோவாவுடையவைகள்;  
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.   
17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்  
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.   
18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்  
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.  
அல்லேலூயா.