சங்கீதம் 123
ஆரோகண பாடல். 
 
1 பரலோகத்தில் இருக்கிறவரே,  
உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.   
2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,  
வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,  
எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,  
எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.   
3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,  
எங்களுக்கு இரங்கும்;  
அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.   
4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,  
அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,  
எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.