சங்கீதம் 124
தாவீதின் ஆரோகண பாடல். 
 
1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,  
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,   
2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,   
3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,  
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.   
4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,  
வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,   
5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்  
என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.   
6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்  
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.   
7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல  
நம்முடைய ஆத்துமா தப்பினது,  
கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.   
8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின  
யெகோவாவுடைய பெயரில் உள்ளது.