சங்கீதம் 127
சாலொமோனின் ஆரோகண பாடல். 
 
1 யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,  
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;   
2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால்  
காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.   
3 நீங்கள் அதிகாலையில் எழுந்து,  
நேரத்துடன் வேலைகளைச் செய்து,  
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;  
அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.   
4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,  
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.   
5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.  
அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;  
அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.