சங்கீதம் 146
1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,  
யெகோவாவை துதி.   
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;  
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.   
3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.   
4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;  
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.   
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,  
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.   
6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;  
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.   
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;  
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;  
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.   
8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;  
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.  
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.   
9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;  
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;  
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.   
10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;  
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.  
அல்லேலூயா.