சங்கீதம் 23
தாவீதின் பாடல். 
 
1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;  
நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.   
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,  
அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.   
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.   
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்  
பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்;  
ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்;  
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.   
5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,  
என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்;  
என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.   
6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;  
நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.