சங்கீதம் 8
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். 
 
1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,  
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!  
உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.   
2 விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட,  
தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.   
3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,  
நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,   
4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,  
மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.   
5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;  
மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.   
6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.   
7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,   
8 ஆகாயத்துப் பறவைகளையும்,  
கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.   
9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,  
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!